டிஜிபி விஜயகுமார்: ஐந்து வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

டிஜிபி விஜயகுமார்: ஐந்து வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

1 mins read
3fd2e08f-ecbf-4242-b5c5-c945df945a23
-

ஸ்ரீந­கர்: ஜம்மு-காஷ்­மீ­ரில் பாது­காப்­புப் படை­யி­னர் நேற்று காலை (ஜூன் 16) நடத்­திய துப்­பாக்­கிச் சூட்­டில் ஐந்து வெளி­நாட்­டுத் தீவி­ர­வா­தி­கள் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர்.

இங்­குள்ள ஜாம­குண்ட் பகு­தி­யில் தீவி­ர­வா­தி­கள் பதுங்­கி­யி­ருப்­ப­தா­கக் கிடைத்த ரக­சி­யத் தக­வ­லின் அடிப்­ப­டை­யில் நடத்­தப்­பட்ட தேடு­தல் வேட்­டை­யில் ஐந்து தீவி­ர­வா­தி­கள் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­தாக முதல்­கட்­டத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இது­தொ­டர்­பாக காஷ்­மீர் கூடு­தல் டிஜிபி விஜ­ய­கு­மார் கூறு­கை­யில், "ஜம்மு-காஷ்­மீ­ரின் குப்­வாரா மாவட்­டத்­தில் எல்­லைக் கட்­டுப்­பாட்­டுக் கோட்­டின் அருகே அத்­து­மீறி இந்­தி­யா­வுக்­குள் நுழைந்த ஐந்து தீவி­ர­வா­தி­கள் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர். இந்த என்­க­வுன்ட்­டர் இன்று அதி­காலை தொடங்­கி­யது. வடக்கு காஷ்­மீர் மாவட்­டத்­தின் ஜாம­குண்ட் பகு­தி­யில் தீவி­ர­வா­தி­கள் ஊடு­ரு­வி­யுள்­ள­தாக வந்­தத் தக­வ­லின் அடிப்­ப­டை­யில் என்­க­வுன்ட்­டர் மேற்­கொள்­ளப்­பட்ட்து. என்­க­வுன்ட்­ட­ரில் ஐந்து வெளி­நாட்­டுத் தீவி­ர­வா­தி­கள் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர்," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.