வீடு தீப்பற்றியதில் பெண், ஐந்து குழந்தைகள் மரணம்

வீடு தீப்பற்றியதில் பெண், ஐந்து குழந்தைகள் மரணம்

1 mins read
565ea63f-a9be-47ab-9a8d-992dd291c792
-

குஷி­ந­கர்: உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தில் நிகழ்ந்த தீ விபத்­தில் ஒரு பெண் உட்­பட ஐந்து குழந்­தை­க­ளின் உயி­ரி­ழந்­தன.

சென்ற புதன்­கி­ழமை குஷி­ந­கர் மாவட்­டம், உர்தா என்ற கிரா­மத்­தில் சங்­கீதா என்ற பெண், தனது 5 குழந்­தை­க­ளு­டன் இரவு தனது வீட்­டில் தூங்­கிக் கொண்­டி­ருந்­தார்.

இந்­நி­லை­யில் நள்­ளி­ர­வில் இவர்­கள் வீடு தீப்­பற்­றி­ய­தில் அனை­வ­ரும் உள்ளே சிக்­கிக் கொண்­ட­னர். தக­வல் அறிந்த தீய­ணைப்­புப் படை­யி­னர் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்­த­னர்.

ஆனால் அதற்­குள் ஆறு பேரும் உடல் கருகி உயி­ரி­ழந்­த­னர். அவர்­க­ளின் உடல்­களை தீய­ணைப்பு படை­யி­னர் மீட்டு பிரே­தப் பரி­சோ­த­னைக்கு அனுப்பி வைத்­த­னர். இது­கு­றித்து விசா­ரணை நடத்த மாவட்ட ஆட்­சி­யர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

அப்­பெண்­ணின் கண­வர் காற்­றுக்­காக வீட்­டுக்கு வெளி­யில் தூங்­கிக் கொண்­டி­ருந்­த­போது வீட்­டில் தீ மூண்­டது. ஆனால் எப்­படி தீ மூண்­டது என்­பது பற்றி விவ­ர­மில்லை. காவல்­துறை இது குறித்து விசா­ரித்து வரு­கிறது.