வெள்ளத்தில் மூழ்கிய 13 மாவட்டங்கள்; அசாம் மக்களில் 38,000 பேர் பாதிப்பு

1 mins read
4ad018ae-ee8d-4cee-b4d9-0b4567f386b7
-

திஸ்­பூர்: வட­கி­ழக்கு மாநி­ல­மான அசா­மில் தொடர்ந்து கன­மழை பெய்து வரு­வ­தால் 13 மாவட்­டங்­கள் வெள்ள நீரில் மிதக்­கின்­றன. இதன்­கா­ர­ண­மாக 38,000 பேருக்­கும் மேலானோர் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்டு உள்­ள­தாக அசாம் மாநி­லப் பேரி­டர் மேலாண்மை ஆணை­யம் (ஏஎஸ்­டி­எம்ஏ) தெரி­வித்­துள்­ளது.

அசா­மில் மொத்­த­முள்ள 31 மாவட்­டங்­களில் 13 மாவட்­டங்­கள் வெள்­ளத்­தில் மிதக்­கின்­றன. குறிப்­பாக பிஸ்­வ­நாத், தர்­ராங், லக்­கிம்­பூர், தாமல்­பூர், உதல்­குரி, திப்­ரூ­கர், ஹோஜாய், நாகோன், சோனிட்­பூர், டின்­சு­கியா உள்­ளிட்ட மாவட்­டங்­கள் வெள்­ளத்­தால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அசாம் முழு­வ­தும் 77 கிரா­மங்­களில் ஏறக்­கு­றைய 210 ஏக்­கர் பயிர்­கள் நாச­மாகி உள்­ள­தால் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

மின்­சார இணைப்­பு­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டுள்­ளன. கவு­காத்­தி­யில் பெய்து வரும் கன­ம­ழை­யால் பிரம்­ம­புத்­திரா ஆற்­றின் நீர்­மட்­டம் உய­ரத் துவங்கி உள்­ளது. மாநி­லத்­தின் பல்­வேறு மாவட்­டங்­களில் பல ஆறு­களில் தண்­ணீர் அள­வுக்கு அதி­க­மாக ஓடு­கிறது.

கவுகாத்தி நக­ரில் கன­ம­ழை­யால் சுவர் இடிந்து விழுந்து ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். அந்த நக­ரில் 360 இடங்­களில் நிலச்­ச­ரிவு ஏற்­படும் அபா­யம் இருப்­ப­தாக அதிகா­ரி­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

அப்­ப­கு­தி­யில் வாழும் மக்­கள் பாது­காப்­பான இடத்­திற்கு அப்­புறப்­ப­டுத்­தப்­பட்டு வருகின்றனர்.

அசாம் குடியிருப்புகளைச் சுற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. படம்: இந்திய ஊடகம்