புதுடெல்லி: தென்மேற்கு டெல்லியின் ஆர் கே புரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் இரு பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இறந்தவர்கள் பிங்கி, 30, ஜோதி, 29, என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பேத்கர் பஸ்தியில் தனது சகோதரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் சகோதரரிடமிருந்து நேற்று அதிகாலை 4.40 மணியளவில் அழைப்பு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
"இரண்டு பெண்கள் சுடப்பட்ட நிலையில், எஸ்ஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்," என்று தென்மேற்கு டெல்லி காவல்துறை துணை ஆணையர் மனோஜ் சி கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், கொலையாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் சகோதரரைப் பின்தொடர்ந்துள்ளனர் என்றும் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பணத் தகராறு இருந்துள்ளது தெரிகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையின் துணை ஆணையர் மனோஜ் சி கூறியுள்ளதாக ஏஎன்ஐ ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.

