தவறான தடுப்பூசியால் 100 தெருநாய்கள் பலி

திருப்பதி: ஆந்திர மாநிலம் முப்பல்லா கிராமத்தில் தெருநாய்த் தொல்லையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து, பிரச்சினைக்குத் தீர்வுகாண அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பஞ்சாயத்து ஊழியர்கள் தெருநாய்களைப் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களைப் பிடித்து கூண்டுகளில் அடைத்தனர்.

அவர்கள் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசிக்குப் பதிலாக தவறான ஊசியைப் போட்டுவிட்டனர். இதனால் அந்த நாய்கள் இறந்தன. இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அலட்சியமாகப் பணியாற்றிய கிராம பஞ்சாயத்து செயலாளர் ஹேமாவதியைப் பணியிடைநீக்கம் செய்தார். மேலும் விளக்கம் கேட்டு மூன்று அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!