கனரக வாகன ஓட்டுநர்களுக்குக் குளிரூட்டி வசதி கட்டாயம்

புதுடெல்லி: இந்தியாவில் கனரக வாகன ஒட்டுநரின் இருக்கைப் பகுதியில் குளிரூட்டி பொருத்துவது 2025ஆம் ஆண்டில் இருந்து கட்டாயமாக்கப்படும்.

நீண்டநேரம் வாகனத்தை இயக்கும் ஒட்டுநர்கள் களைப்படையாமல் இருக்க இது பெரிதும் உதவும் எனச் சொல்லப்படுகிறது. ஒட்டுநரின் இருக்கைப் பகுதியில் செய்யப்படும் இந்த மாற்றம் பெரும்பாலான விபத்துக்களைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுநர்கள் ஓய்வின்றி உழைப்பது பெரும்பாலான விபத்துகளுக்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

வால்வோ, ஸ்கேனியா போன்ற கனரக வாகன நிறுவனங்கள் ஏற்கெனவே ஒட்டுநரின் இருக்கைப் பகுதிக்கு குளிரூட்டி வசதியை அமைத்துள்ளபோதும் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் இன்னும் அதனைச் செய்யவில்லை.

இந்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி திங்கட்கிழமை விடுத்த அறிவிப்பில், கனரக வாகனங்களின் ஓட்டுநரின் இருக்கைப் பகுதியில் குளிரூட்டி பொருத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளேன் என்றும் இந்த மாற்றம் நடைமுறைக்கு வர 18 மாதங்கள் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குளிரூட்டி வசதியை ஏற்படுத்தித் தர ஒரு வாகனத்திற்கு 10,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாய்வரை செலவாகும் என்று தோராயமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!