ஆந்திரா: ஆந்திர, அனகாபள்ளி மாவட்டம் அச்சுதாபுரத்தில் உள்ள ‘பார்மா’ மருந்தக தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் 35 பேர் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. அதில் எழுவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை 80 விழுக்காட்டு தீக்காயங்களுடன் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரசாயன கலவை இருந்த இரு பாய்லர்கள் வெடித்து சிதறியதில் தீ ஏற்பட்டதாக அறியப்படுகிறது.