புதுவை: புதுச்சேரியில் உருவாக்கப்பட்ட 600 கிலோ திருவள்ளுவர் சிலை பிரான்சில் நிறுவப்படுகிறது
இந்தச் சிலையை பிரதமர் மோடி பார்வையிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உள்ள தமிழ் கலாசார மன்றம் பிரான்ஸ் அரசின் அனுமதி பெற்று அங்கு மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச்சிலையை கடந்த 2011ஆம் ஆண்டில் நிறுவியது.
இந்த நிலையில் பிரான்ஸ் அரசு அனுமதியுடன் ஜெர்சி நகரத்தில் உள்ள பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை செப்டம்பர் மாதம் நிறுவப்பட உள்ளது. இந்தச் சிலையை புதுச்சேரியை சேர்ந்த பத்ம விருது பெற்ற சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார்.
வெண்கலத்தில் ஏழு அடியில் 600 கிலோ எடையில் திருவள்ளுவர் சிலை பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு விமானத்தில் திருவள்ளுவர் சிலை பிரான்சுக்கு கொண்டு செல்லப்
இந்தச் சிலையை பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். தமிழ் கலாசார மன்றத்தின் மூலம் பிரான்சில் வாரந்தோறும் தமிழ் மொழி வகுப்புகள், பண்பாட்டு இசை, நடனப்பயிற்சி வகுப்புகள் இளையோருக்கு நடத்தப்படுகிறது.