கோழிக்குழம்புக்காக மனைவியை கோடரியால் வெட்டிக் கொன்ற கணவன்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிஷ்தம்பேட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் போஷம். அவர் தன் மனைவி சங்கரம்மாவை கோடரியால் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமை வீட்டில் கோழிக்குழம்பு சமைக்கும்படி போஷம் கோழிக்கறி வாங்கிக் கொடுத்ததாகவும் சங்கரம்மா கோழிக்குழம்பு சமைக்காமல் கத்தரிக்காய் குழம்பு தயார் செய்ததாகவும் கூறப்பட்டது.

இதனால், மதுபோதையில் போஷம் மனைவியிடம் இரவு நேரத்தில் சண்டையிட்டதாகத் தெரிகிறது.

அதிகாலையில் விழித்த போஷம், வீட்டில் இருந்த கோடரியால் தூங்கிக்கொண்டிருந்த மனைவி சங்கரம்மாவை வெட்டிக் கொன்றார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சங்கரம்மாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், சங்கரம்மா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய ஆடவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!