2 கி.மீ. வரிசையில் நின்று தக்காளி வாங்கினர்

கடப்பா: இந்தியாவில் தக்காளி விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் குறைந்த விலையில் தக்காளி விற்கப்பட்டதால் பொதுமக்கள் குவிந்தனர். சுமார் 2 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் நின்று மக்கள் தக்காளியை வாங்கிச் சென்றனர்.

தக்காளி விலை ஆந்திர மாநிலத்தில் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது.

கடப்பாவில் விவசாயி ஒருவர் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளியை ரூ.50க்கு விற்றார். இந்தத் தகவல் வேகமாகப் பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த தக்காளி வியாபாரியைச் சூழத் தொடங்கினர்.

காவல் துறையினர் வந்து மக்களை வரிசையில் நிற்கச் செய்து நெரிசலைக் கட்டுப்படுத்தினர். 2 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தலா 3 கிலோ தக்காளியை மக்கள் வாங்கிச் சென்றனர்.

இதனிடையே, நாடு முழுவதும் தக்காளி விலை குறையத் தொடங்குவதாக புதன்கிழமை தகவல்கள் தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!