கடத்தப்பட்ட பொருள்களை ஒப்படைத்த அமெரிக்கா; பிரதமர் மோடி நன்றி

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தையொட்டி, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்காலப் பொருள்களையும் சிற்பங்களையும் திருப்பித் தர அமெரிக்கா முடிவு செய்தது.

இதையடுத்து நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் 105 பழங்காலப் பொருள்களை தூதரக அதிகாரிகளிடம் அமெரிக்க அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதற்குப் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “இது ஒவ்வோர் இந்தியனையும் மகிழ்விக்கும் நடவடிக்கை. இதற்காக அமெரிக்காவுக்கு நன்றி. இந்த விலைமதிப்பற்ற கலைப்பொருள்கள், மகத்தான கலாசார, சமய முக்கியத்துவம் வாய்ந்தவை. நமது பாரம்பரியம், வளமான வரலாற்றைப் பாதுகாப்பதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு இப்பொருள்கள் தாயகம் வருவது ஒரு சான்றாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த 12, 13ஆம் நூற்றாண்டுப் பளிங்கு வளைவு, மத்திய இந்தியாவைச் சேர்ந்த 14, 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்சரா, தென்னிந்தியாவைச் சேர்ந்த 14,15ஆம் நூற்றாண்டு சம்பந்தர், 17, 18ஆம் நூற்றாண்டு வெண்கல நடராஜர் ஆகியவை திருப்பி ஒப்படைக்கப்பட்ட பொருள்களில் அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!