தக்காளி லாரியைக் கடத்திய தமிழ்நாட்டுத் தம்பதி

பெங்களூரு: பணம் பறிப்பதற்காக விபத்து நடந்ததுபோல நாடகமாடி 2.5 டன் தக்காளி நிரம்பியிருந்த லாரியைக் கடத்திச் சென்ற தம்பதியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூரைச் சேர்ந்த அத்தம்பதி நெடுஞ்சாலைக் கொள்ளையர் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை கூறியது.

சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த மல்லேஷ் ஒரு விவசாயி. ஜூலை 8ஆம் தேதி சித்திரதுர்கா பகுதியில் இருந்து 2.5 டன் தக்காளியை கோலாருக்கு லாரியில் ஏற்றிச் சென்றார். லாரியில் இருந்த தக்காளியின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 2.5 லட்சம் ரூபாய். சிக்கஜாலா எனும் இடத்தில் அந்த லாரி தங்கள் காரில் மோதியதாகக் கூறி கொள்ளைக் கும்பல் ஒன்று பணம் கேட்டது. ஆனால் மல்லேஷ் பணம் தர மறுத்தார்.

எனவே அவரைத் தாக்கிய அக்கும்பல், லாரியில் இருந்து மல்லேஷைக் கீழே தள்ளியது. பின்னர் அக்கும்பலைச் சேர்ந்தோர் அந்த லாரியை ஓட்டிச் சென்றனர். மல்லேஷ் காவல்துறையிடம் புகாரளித்தார். அதன் அடிப்படையில் லாரியின் நடமாட்டத்தைக் கண்காணித்த காவல்துறை கொள்ளைக் கும்பலை அடையாளம் கண்டது.

சம்பவம் தொடர்பில் பாஸ்கர் எனும் ஆடவரும் அவரது மனைவி சிந்துஜாவும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!