மாசடைந்த நீரை அருந்தியதால் இருவர் உயிரிழப்பு, ஐவர் கவலைக்கிடம்

சித்ரதுர்கா: இந்தியாவின் கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் மாசடைந்த நீரை அருந்தியதால் இருவர் மாண்டுபோயினர்.

மேலும் 36 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

காவடிகரகட்டியைச் சேர்ந்த மஞ்சுளா, 23, மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இன்னொருவரான ரகு, 27, மாசடைந்த நீரை அருந்தியபின் பெங்களூரு சென்றபின் உடல்நிலை மோசமடைந்து, பின்னர் மாண்டுபோனார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து, நகராட்சி விநியோகம் செய்த நீரை அருந்த வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்நீரை அருந்திய சிலர் கடும் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டு, மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமாக உள்ள நோயாளிகள் அருகிலுள்ள தாவனகரே நகர மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் காவடிகரகட்டியில் முகாமிட்டுள்ளனர்.

நீர் மாசடைந்ததற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அவ்வூர் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட நீரும் அவர்களின் கழிவுகளும் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!