தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு

குருகிராம்: ஹரியானாவில் திங்கட்கிழமை மூண்ட கலவரத்தாலும் வன்முறைச் சம்பவத்தாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. 

காவல்துறை அதிகாரிகள் இதுவரை 116 பேரைக் கைதுசெய்துள்ளனர். அத்துடன், 41 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், ஹரியானாவில் நடந்த வன்முறை தலைநகர் டெல்லியில் இருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள குருகிராம் வரை எட்டியுள்ளது. 

அங்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்த வன்முறையில் பல கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக டெல்லியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட குருகிராமின் சோஹ்னா பகுதியில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புதன்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

ஹரியானாவின் நூ பகுதியில் நடந்த வன்முறையைக் கண்டித்து டெல்லியில் சில முக்கிய இடங்களின் அருகே சில அமைப்புகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நூ பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து, அதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை வன்முறைக் கும்பல் ஒன்று குருகிராமிலுள்ள பாட்ஷாபூரில் உள்ள ஓர் உணவகத்துக்குத் தீ வைத்தது. 

மேலும், அதற்கு அருகிலிருந்த கடைகளையும் அக்கும்பல் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!