தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புனேயில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாபெரும் சிலை

2 mins read
62ab8878-a050-430c-8618-88edff018091
குஜராத்திலுள்ள நர்மதா அணைக்கு அருகில் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை. - படம்: ஊடகம்

புனே: மகாராஷ்டிர மாநிலத்தின் புனே அருகே லவாசா சுற்றுலாத்தலம் உள்ளது. அங்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்துசெல்வர். மேலும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், அந்த நகரத்தில் பல்வேறு வசதிகளை மேம்படுத்த ‘டார்வின் பிளாட்பார்ம்’ என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது.

அவ்வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு 190 மீட்டர் முதல் 200 மீட்டர் உயரச்சிலை நிறுவ முடிவு செய்துள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டால் அதுவே உலகின் ஆகப்பெரிய சிலை என்று கூறப்படுகிறது.

பிரதமர் சிலை திறப்பு விழாவிற்கு இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாட்டு தூதர்களை அழைக்கவும் டார்வின் பிளாட்பார்ம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் தொலைநோக்கு செயல் திட்டம், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பிரதமர் மோடிக்கு லவாசாவில் அமைக்கப்படும் சிலை நாட்டின் அழிக்க முடியாத அடையாளச் சின்னமாக இருக்கும். இந்தச் சிலை குஜராத் மாநிலத்தில் உள்ள 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் படேல் சிலையை விட உயரமானதாக, அதாவது 190 மீட்டர் முதல் 200 மீட்டர் வரையிலும் இருக்கும். இந்தச் சிலையை வரும் டிசம்பர் இறுதிக்குள் கட்டி முடித்து திறக்க முடிவு செய்துள்ளோம் என்று டார்வின் பிளாட்பார்ம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ஹரிநாத் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சிலையை சுற்றி, பொழுதுபோக்கு மையம், நினைவுப் பூங்கா, இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சிக் கூடம் போன்றவற்றையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தக் கண்காட்சி அரங்கில், பிரதமர் மோடி இதுவரை செய்த சாதனைகள், புதிய இந்தியாவை உருவாக்க அவர் செய்த செயல்கள், மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ஆகியவை திரையிடப்படும்” என்று ஹரிநாத் கூறியுள்ளார்.

சிலையை வரும் டிசம்பர் இறுதிக்குள் கட்டி முடித்து திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் சிலை திறப்பு விழாவிற்கு இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாட்டு தூதர்களை அழைக்கவும் டார்வின் பிளாட்பார்ம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்