தக்காளி திருட்டைத் தடுக்க சிசிடிவி கேமரா

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தக்காளித் திருட்டைத் தடுக்க விவசாயி ஒருவர் தமது விளைநிலத்தில் சிசிடிவி கேமரா அமைத்துள்ள செய்தி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்ஹஞ்ச் நகர் வலுஜா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சரத் ரவெட் தமது விளைநிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.

தக்காளி நன்றாக விளைச்சல் தருவதால் அவருக்கு லாபம் கிடைத்து வருகிறது. அதேவேளை விளைநிலத்தில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியை இரவு நேரத்தில் சிலர் திருடிச் செல்லும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து தக்காளித் திருட்டைத் தடுக்க எண்ணிய விவசாயி சரத் ரவெட், 22 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தக்காளி பயிரிட்டுள்ள பகுதியில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளார்.

அவரைப்போலவே தக்காளி பயிரிட்டுள்ள வேறு பல வியாபாரிகள் இரவு, பகலாகக் கண்காணித்து, தக்காளிப் பழங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

நாட்டில் தக்காளி விலை உச்சத்தில் உள்ளது. சில நாள்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய் வரை விற்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!