2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி; கணவர் சூசகம்

புதுடெல்லி: இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அவருடைய கணவர் ராபர்ட் வத்ரா சூசகமாகத் தெரிவித்து இருக்கிறார்.

பிரியங்கா காந்தி இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செயலாளராக இருக்கிறார்.

அவர் நாடாளுமன்றத்தில் மிக அருமையாகச் செயல்படக்கூடியவர் என்றும் அவரை காங்கிரஸ் கட்சி களத்தில் இறக்க திட்டமிடும் என்று தான் நம்புகிறேன் என்றும் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் திரு வத்ரா கூறி இருக்கிறார்.

பிரியங்கா காந்தி நிச்சயமாக நாடாளுமன்றத்தில் இருப்பார். அவருக்கு அதற்கான எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் மிக அருமையாக செயல்படக்கூடிய திருமதி பிரியங்கா காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முழுத் தகுதி பெற்றவர் என்றாரவர்.

இதனை உணர்ந்து காங்கிரஸ் கட்சி பிரியங்காவிற்கான சிறப்பான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்பதே தமது நம்பிக்கை என்றும் அவர் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரே பரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் 20 ஆண்டுகாலமாக பிரியங்கா மிகத் தீவிரமாக தேர்தல் தொண்டாற்றி இருக்கிறார். கட்சியை அவர் அங்கு நன்கு வளர்த்து இருக்கிறார்.

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பாஜக உறுப்பினரிடம் தோற்று இருக்கிறார். ஆனால், 2004 முதல் ரே பரேலியில் சோனியா காந்தியைத் தோற்கடிக்க இயலவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!