திருப்பதி செல்வோருக்கு வனத்துறை எச்சரிக்கை

திருப்பதி: திருப்பதி மலையில் சிறுத்தை, கரடி, முள்ளம் பன்றி ஆகியவை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இரவில் தொடர்ந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வனத்துறையினர் பொருத்தி இருக்கும் ட்ராப் கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள் மூலம் இது தெரியவந்துள்ளதால் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருப்பதி மலையில் உள்ள முதலாவது பாதையில் இருக்கும் யானை வளைவு அருகே சிறுத்தைப் புலி ஒன்றின் நடமாட்டம் இருப்பது நடைபாதையில் அண்மையில் பொருத்தப்பட்டு இருக்கும் ட்ராப் கேமராவில் பதிவாகியுள்ளது.

சிறுத்தைகளைப் பிடிப்பதற்காக மேலும் ஆறு கூண்டுகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.

அதேபோல் திருப்பதி மலையில் உள்ள சிறப்பு தங்குவிடுதி பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதும் ட்ராப் கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுதவிர பல்வேறு இடங்களில் முள்ளம்பன்றிகள், காட்டு பன்றிகள், புனுகு பூனைகள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதும் இரவிலும் தானியங்கி முறையில் படம்பிடிக்கும் ட்ராப் கேமராக்களில் பதிவாகியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!