வீரா்களுக்கான மின்னணு கவச உடை உள்பட ரூ. 7,800 கோடி மதிப்பிலான ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய இந்திய பாதுகாப்பு அமைச்சு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரூ. 7,800 கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் பரிந்துரை தொடா்பாக பாதுகாப்பு அமைச்சா் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் குழு (டிஏசி)கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், எம்ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டரில் பயணிக்கும் வீரா்களுக்கான மின்னணு போா்க் கவச உடைகள், இந்தியக் கடற்படையின் எம்ஹெச்-60ஆா் ரக ஹெலிகாப்டா்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் ஆயுதங்கள், ஆளில்லா கண்காணிப்பு மற்றும் வெடிபொருள்கள், எரிபொருள், உதிரிபாகங்கள் எடுத்துச் செல்வதற்கும், அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்கும் உதவும் வகையில் போா் வாகனங்கள், பீரங்கிகள் ஆகியவற்றுக்கான கொள்முதலுக்கு டிஏசி ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், இலகுரக இயந்திர துப்பாக்கி, தற்காலிக பாலமாக செயல்படும் பாதுகாப்பு வாகனம், சக்தி திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்துக்கு கடின பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலான மடிக்கணினிகள், கையடக்கக் கணினிகள் கொள்முதல் செய்யவும் டிஏசி ஒப்புதல் அளித்துள்ளது.
இவை அனைத்தும் உள்நாட்டு உற்பத்தியாளா்களிடமிருந்தே கொள்முதல் செய்யப்பட உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.