சத்தீஸ்கர்: 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்

சத்தீஸ்கர்: சட்டமன்றத் தேர்தலில் மாற்றுத்திறன் கொண்டவர்களும் 80 வயதைத் தாண்டியவர்களும் இனி வீட்டில் இருந்தவாறு அஞ்சல் வாக்குகள் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அங்கு வரும் அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

சத்தீஸ்கரில் மொத்தம் 1.97 கோடி வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 98.5 லட்சம் பெண்கள், 98.2 லட்சம் ஆண்கள், 762 மூன்றாம் பாலினத்தவா்கள் உள்ளனா். மாநிலத்தில் மொத்தம் 24,109 வாக்குச்சாவடிகள் உள்ளன.

சட்டவிரோதமாக மது, பணம், பொருள்கள் மற்றும் போதைப்பொருள் எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்க, மாநிலங்களுக்கு இடையிலான 105 எல்லை சோதனைச் சாவடிகளில் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிா்வாக, சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!