பாசுமதி அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு

புதுடெல்லி: பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்து உள்ளது.

கடந்த சனிக்கிழமை, புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 விழுக்காடு வரி விதித்தது. அதற்கு மறுநாளே பாசுமதி அரிசிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

ஒரு மெட்ரிக் டன் பாசுமதி அரிசிக்கான ஏற்றுமதி விலை குறைந்தபட்சம் 1,200 டாலராக இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இனி 1,200 டாலருக்குக் குறைவாக பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்ய முடியாது. பாசுமதி அரிசி ஏற்றுமதியைக் குறைக்கும் நோக்கிலும் விலை உயர்வைத் தடுக்கவும் இந்தக் கட்டுப்பாடுகொண்டு வரப்படுவதாக செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த சில வாரங்களாக பெய்துவந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரிசி விலை உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 விழுக்காடாக உள்ளது. இந்தியாவில் இருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்து வருகிறது.

ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடு விதித்திருப்பதால் அனைத்துலகச் சந்தையில் அரிசி விலை உயர்ந்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!