வீட்டின் கூரை இடிந்து விழுந்து ஐவர் பலி

லக்னோ: இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரின் புறப்பகுதியில் இருக்கும் ஒரு காலனியில் உள்ள ஒரு வீட்டின் கான்கிரீட் கூரை சனிக்கிழமை காலை நேரத்தில் திடீரென இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

அந்த வீட்டில் சதிஷ் சந்திரா என்பவரும் அவரின் குடும்பத்தாரும் வசித்து வந்தனர்.

சம்பவம் நிகழ்ந்தபோது அந்தப் பகுதியில் இருந்த துப்புரவுப் பணியாளர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

காவல்துறை அதிகாரிகளும் பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

திரு சதிஷ் சந்திரா, 40, அவரின் மனைவி சரோஜினி தேவி, 35, ஹர்ஷித், 13, ஹர்ஷிதா, 10, அன்ஷ், 5, ஆகிய அத்தம்பதியரின் மூன்று பிள்ளைகளும் மாண்டுவிட்டனர்.

அவர்களின் உடல்களை மீட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!