இந்தியாவில் பெண்களை ஊழியரணிக்கு ஈர்க்க அனைத்துலக வங்கிகள் முயற்சி

மும்பை: இந்தியாவின் பல பகுதிகளில் பெண் ஊழியர்களை ஊழியரணிக்கு ஈர்த்து அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் ஒரு பகுதியாக, அனைத்துலக நிதி நிறுவனங்கள் மகப்பேறு அனுகூலங்களை விரிவுபடுத்தி வருகின்றன.

வங்கியாளர்களின் செவிலித் தாய்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை எச்எஸ்பிசி வங்கி கட்டணம் செலுத்துகிறது. கர்ப்பிணி ஊழியர்கள் டாக்சி வேலைக்கு வந்துசெல்வதற்கான கட்டணத்தை மோர்கன் ஸ்டேன்லி வங்கி ஏற்கிறது.

இந்தியாவில் கால்வாசிக்கும் குறைவான பெண்களே வேலைக்குச் செல்கின்றனர். இது, உலகிலேயே ஆகக் குறைவான விகிதமாகும்.

“பெண்களின் பங்கேற்பு இன்றி இந்தியாவால் வளர்ச்சியடைந்த நாடு என்ற நிலையை எட்ட முடியாது,” என்று சிட்டி இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைமை மனிதவள அதிகாரி ஆதித்யா மிட்டல் தெரிவித்தார்.

சம்பளத்துடன் கூடிய விடுப்பு முடிந்தவுடன் ஓராண்டு வரை வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தெரிவு புதிய தாய்மார்களுக்கு இனி வழங்கப்படும் என்று சிட்டி வங்கி கடந்த வாரம் அறிவித்திருந்தது.

பெண்களுக்கான வேலைப் பயிற்சித் திட்டம் ஒன்றை இந்திய அரசாங்கம் 2021ல் தொடங்கியது. வீட்டிற்கு வெளியே வேலை செய்யுமாறு பெண்களை ஊக்குவிக்க நீக்குபோக்கு வேலை நேரத்தைக் கடைப்பிடிப்பது ஒரு சிறந்த வழி என்று கடந்த ஆண்டு அரசாங்கம் கூறியிருந்தது.

இந்தியாவில் திறனாளர்களை ஈர்க்கும் வேட்கையில் வங்கிகள் உள்ளன. அமெரிக்கா-சீனா பதற்றநிலை தொடரும் வேளையில், பல அனைத்துலக வங்கிகளின் கவனம் தற்சமயம் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!