மாணவிகளின் முடி போனது; ஆசிரியைக்கு வேலை போனது

திருப்பதி: ஆந்திர மாநிலம், காக்கிநாடா, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நகரில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் அழகாக தலை சீவி சடை பின்னல் போட்டு வர வேண்டும் என விதிமுறை உள்ளது.

ஆனால் அந்தப் பள்ளியில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவிகள் எட்டுப் பேர் தலைமுடியை சீவி சடை பின்னல் போடாமல் தலைவிரி கோலமாக வகுப்புக்கு வந்தனர்.

ஆசிரியை மாணவிகளின் தலைவிரி கோலத்தைக் கண்டு ஆத்திரம் அடைந்தார். தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற ஆசிரியை அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்துவந்து தலைவிரி கோலத்துடன் வந்த எட்டு மாணவிகளையும் வரிசையாக நிற்க வைத்து அவர்களது முடியை ஒட்ட வெட்டினார்.

இதனை கண்ட சக மாணவிகள் அவர்களை கிண்டல், கேலி செய்தனர்.

இதனால் அவமானம் அடைந்த மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.

தங்களது மகள்களின் கோலத்தைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளிக்கு வந்த அவர்கள் மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை உடனடியாக தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோரிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் வீடு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!