கர்நாடகா: தறிகெட்டு ஓடி மேம்பாலச் சுவரில் தொங்கிய கார்

ஹாசன்: கர்நாடக மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை 75ல் ஞாயிற்றுக்கிழமை இரவு தறிகெட்டு ஓடிய கார் ஒன்று, மேம்பாலத்தில் ஏறியபோது கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து மேம்பாலச் சுவரில் தொங்கியது. 20 அடி உயரத்தில் மேம்பால தடுப்புச்சுவரில் அந்தரத்தில் சிக்கியபடி கிடந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் பலியானார். மேலும் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இந்த விபத்து ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா வட்டத்தைச் சேர்ந்த ஷெட்டிஹள்ளி என்னும் சிற்றூருக்கு அருகே நடந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், வாகனத்தில் உயிருக்குப் போராடிய மூன்று பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதிவேகமாக காரை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் திங்கட்கிழமை நடந்த இன்னொரு விபத்தில், மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று சாலைத்தடுப்பில் மோதி எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!