‘புகையிலைப் பொருள்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு’

சென்னை: தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஈராண்டுகளில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் குட்கா, பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன்படி, மேற்கொண்டு வருகிறது,” என்றார்.

“தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஷவர்மா, மீன் மற்றும் அனைத்து வகையான இறைச்சி உணவுகளை விற்பனை செய்யும் 15,236 உணவகங்களை ஆய்வுசெய்து, 1,572 உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, 5,018 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. ரூ.8,79,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 23 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

“மேலும், தேங்காய் சட்னி, தயிர் மற்றும் மோர் ஆகிய உணவுப் பொருள்களின் தரம் குறித்தும் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 7,760 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 238 கடைகளில் தரம் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டு, 213 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,47,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட தொகை ரூ.10,26,800 ஆகும்.

“உச்ச நீதிமன்ற அறிவுரையின்படி, புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மானமாகக் கொண்ட உணவுப் பொருள்கள் மீதான தடையை தமிழ்நாடு அரசு கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி அமல்படுத்தியது. இந்தத் தடையை ஆண்டுதோறும் நீட்டித்துவருகிறது. அதன்படி, இத்தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து உணவுப் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது,” என்றும் அமைச்சர் விவரித்தார்.

191.1 டன் பறிமுதல்

“கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் அளவிலான குட்கா, பான்மசாலா கைப்பற்றப்பட்டுள்ளன. 603 உணவுமாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, 535 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றவை என அறிக்கை பெறப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ரூ.21.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 35 உணவு மாதிரிகள் தரம் குறைவானது என அறிக்கை பெறப்பட்டு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ரூ.2.93 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவு நிறுவனங்களில் 1,67,986 இணையவழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. 48,217 உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, 2,975 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றவை எனவும், 9,720 உணவு மாதிரிகள் தரமற்றவை எனவும், பகுப்பாய்வறிக்கை பெறப்பட்டது.

அதனடிப்படையில், உரிமையியல் நீதிமன்றத்தில் 9,093 வழக்குகள் தொடரப்பட்டு ரூ.7.97 கோடி அபராதமும், குற்றவியல் நீதி மன்றத்தில் 2,063 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.40 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது,” என்றும் திரு மா.சுப்பிரமணியன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!