புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக் குற்றங்களைக் கண்டறிய 10 கிலோமீட்டர் இடைவெளியில் நவீன கேமராக்களை பொருத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
இதுதொடா்பாக ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
“தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் மேம்படுத்தப்பட்ட சாலைப் பாதுகாப்புக்கும் போக்குவரத்து விதிமுறைகளை மின்னிலக்க வடிவில் அமல்படுத்த முக்கியத்துவம் கொடுக்கவும் அதிநவீன போக்குவரத்து நிா்வாக அமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
“இதையொட்டி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், அந்தச் சாலைகளில் நடப்பில் உள்ள விஐடிஎஸ் கேமராக்களுக்கு பதிலாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விஐடிஇஎஸ் கேமராக்களை பயன்படுத்துவதும் அடங்கும்.
“ஒவ்வொரு 10 கிலோமீட்டர் இடைவெளியிலும் இந்த நவீன மின்னிலக்க கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
“இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்வது, தலைக்கவசம் மற்றும் காரில் இருக்கை வார் அணியாதது, எதிர்த் திசையில் வாகனத்தை ஓட்டுவது, குறுக்கிடும் கால்நடைகளைக் கண்டறிவது போன்றவை உள்ளிட்ட 14 நிகழ்வுகளை காணொளி வாயிலாக கண்டறியும் திறன் விஐடிஇஎஸ் கேமராக்களுக்கு உள்ளது.
“விதிமீறல் நிகழ்வுகள் கண்டறியப்பட்ட பின்னா், அதுகுறித்து நெடுஞ்சாலை வழித்தடத்தில் உள்ள ரோந்து வாகனங்கள் அல்லது ஆம்புலன்சுகள் உஷாா்படுத்தப்படும். இணையவழி அபராத ரசீதுகள் பிறப்பிக்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.