வரலாற்றுச் சம்பவம்: ஒரே ரயில் நிலையத்தில் 4,438 பேர் பிடிபட்டனர்

தானே: பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் பயணம் செய்த 4,438 பேர் ஒரே நாளில் பிடிபட்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் நகர் ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை நடந்த அதிரடிச் சோதனையின்போது அவர்கள் சிக்கினர்.

அவர்களில் யாருமே பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் பயணம் செய்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 16.85 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு நாளில் பயணச்சீட்டு இல்லாமல் இத்தனை போ் பிடிபட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

பயணச்சீட்டு வாங்காமல் பலர் பயணம் செய்தது தெரிய வந்ததும் 167 பயணச்சீட்டு பரிசோதகர்கள் இரு மூத்த அதிகாரிகளின் தலைமையில் களமிறக்கப்பட்டனர். அவர்களின் பாதுகாப்புக்கு 35 ரயில்வே பாதுகாப்புப் படையினர் உதவி செய்தனர்.

ரயில் நிலையத்தின் உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டு, திங்கட்கிழமை காலை முதல் இரவு வரை சுழற்சி முறையில் பயணச் சீட்டு பரிசோதனையை பரிசோதகர்கள் மேற்கொண்டனா்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!