மாதம் ரூ.5.6 லட்சம்: துபாய் லாட்டரியில் தமிழருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்

புதுடெல்லி: துபாயில் வசிக்கும் தமிழரான மகேஷ்குமார் நடராஜன் அங்கு நடைபெறும் லாட்டரி குலுக்கலில் ஒன்றான ஃபாஸ்ட்5 கிராண்ட் லாட்டரியில் பரிசு வென்றுள்ளார்.

இதில் வென்றவருக்கான பரிசுத் தொகையாக அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 25,000 திராம் (இந்திய மதிப்பில் ரூ.5.6 லட்சம்) அளிக்கப்படும்.

ஆம்பூரைச் சேர்ந்த மகேஷ்குமார் 2019-ல் துபாயில் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் திட்ட மேலாளாராகப் பணியாற்றி வருகிறார். துபாய் சென்ற பிறகு தான் இதுபோன்ற குலுக்கல் இருப்பது அவருக்குத் தெரிய வந்துள்ளது.

பரிசு வென்ற பிறகு மகேஷ்குமார், “என்னுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களைச் சந்தித்துள்ளேன். என் சமூகத்தைச் சார்ந்த பலர் என் படிப்பிற்கு உதவி செய்ததால்தான் என்னால் படிக்க முடிந்தது.

“எனக்கு உதவிய சமூகத்திற்கு திருப்பிச் செய்வதற்கான நேரம் இது. சமூகத்தில் தேவையுள்ளவர்களுக்கு நான் நிச்சயம் இந்தத் தொகையைக் கொண்டு உதவுவேன்,” என்று கூறியுள்ளார்.

49 வயதான மகேஷ்குமாருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களது படிப்புக்கு இதனைப் பயன்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!