தசரா திருவிழா: மின்னொளியில் மிளிரும் மைசூரு அரண்மனை

மைசூரு: கர்நாடக மாநிலத்தின் மைசூரு நகரில் பன்னெடுங்காலமாக தசரா திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம்.

இந்த ஆண்டு 414வது ஆண்டாக, அக்டோபர் 15ஆம் தேதி முதல் இவ்விழா கொண்டாடப்பட்டுவருகிறது.

இத்திருவிழாவை முன்னிட்டு, மைசூரு அரண்மனை உட்பட நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

இளையர் தசரா, உணவு மேளா, தசரா கண்காட்சி, மலர்க் கண்காட்சி, திரைப்பட விழா, குழந்தைகள் தசரா உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரண்மனையில், மன்னர் யதுவீர் தலைமையில் பாரம்பரிய, கலாசார முறைப்படி நவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை (அக். 24) மாலை ஜம்பு சவாரி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மனை ஏந்தியபடி 14 யானைகள் மைசூரு நகரின் முக்கியச் சாலைகள் வழியாக ஊர்வலம் செல்லும்.

இத்துடன், சாகச நிகழ்ச்சிகளும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இவ்விழாவைக் காண மைசூரில் லட்சக்கணக்கானோர் குவிந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. காவல்துறையைச் சேர்ந்த 3,000 பேர், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!