முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து தேர்வு எழுத அனுமதி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அனைத்து வகையான தேர்வுகளிலும் இஸ்லாமிய மாணவிகள் ‘ஹிஜாப்’ எனப்படும் தலையங்கியை அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநிலக் கல்வியமைச்சர் சுதாகர் இதனைத் தெரிவித்தார்.

முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

மாநிலத்தில் பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் மட்டுமன்றி அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் முஸ்லிம் மாணவிகள் தலையங்கி அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே முஸ்லிம் மாணவிகள் தலையங்கி அணிந்து நீட் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை அவர் சுட்டினார்.

எனவே தங்கள் அரசாங்கம் இவ்வாறு முடிவெடுத்ததில் தவறில்லை என்றார் திரு சுதாகர்.

இந்நிலையில், அரசாங்கத்தின் இந்த அனுமதியைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்துத்துவா அமைப்புகள் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!