ரூ.1 டிரில்லியன் வரி ஏய்ப்பு; நிறுவனங்களுக்கு இந்திய அரசு கோரிக்கை

புதுடெல்லி: இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் இணைய விளையாட்டு நிறுவனங்களுக்குக் கோரிக்கைக் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

அந்த நிறுவனங்கள், சுமார் ரூபாய் ஒரு டிரில்லியன் ($12.03 பில்லியன்) வரி ஏய்ப்பு செய்து இருக்கின்றன என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

அரசாங்க தகவல் வட்டாரம் ஒன்று புதன்கிழமை இதனைத் தெரிவித்தது.

இணைய விளையாட்டுகளில் முன்பணமாகச் செலுத்தப்படும் மொத்த தொகையின் அடிப்படையில், அத்தகைய நிறுவனங்கள் 28 விழுக்காட்டு வரி செலுத்த வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட்டில் இந்திய அரசாங்கம் முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்க்கையில், அத்தகைய நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக தெரியவந்து இருக்கிறது என்று தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த விவகாரம் பற்றி கருத்து கூற இந்திய நிதி அமைச்சு மறுத்துவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!