மும்பை: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் வழியாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை சனிக்கிழமை தெரிவித்தது.
அந்த மின்னஞ்சல் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது. அம்பானி ரூ.20 கோடி தராவிட்டால் அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிடப் போவதாக மின்னஞ்சலை அனுப்பிய அந்தச் சந்தேக நபர் குறிப்பிட்டதாகக் காவல்துறை கூறியது.
இதன் தொடர்பில் மும்பையின் காம்தேவி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு, சர் எச்.என். ரிலையன்ஸ் ஃபவுன்டேஷன் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட பீகாரைச் சேர்ந்த 30 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மும்பையின் அம்பானியின் குடியிருப்புக் கட்டடமான ‘அண்டிலியா’வுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த ஆடவர், அம்பானியின் குடும்பத்தாருக்கும் மிரட்டல் விடுத்திருந்தார்.