உத்தவ் தாக்கரே: தேர்தல் நடத்தினால் தெரியும் அசல் யார் போலி யார் என்று

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடத்திப் பாருங்கள் அப்போது மக்கள் தெரிவிப்பார்கள் யார் அசல் யார் போலி என்று என உத்தவ் தாக்கரே முதல்வர் ஏக்னாத் ஷிண்டேவுக்கு சவால் விடுத்துள்ளார்.

சிவசேனா கட்சி இரண்டாக உடைக்கப்பட்டு உத்தவ் தாக்கரே ஒரு அணியாகவும் ஏக்னாத் ஷிண்டே மற்றொரு அணியாகவும் செயல்படுகின்றனர். ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் பாஜகவுடன் கைகோத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளனர்.

“சட்டப் பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடினோம். இது தொடர்பான முடிவு உரிய நேரத்தில் எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துவிட்டார்.

இப்போது ஒரே வழி, நடந்ததையெல்லாம் விட்டுவிடுவோம். உடனடியாகத் தேர்தலை நடத்துவதற்கு வழிகாண்போம். அப்போது உண்மையான சிவசேனா கட்சிக்கு உரிமையுள்ளவர்கள் யார் என்பது தெரியும். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் தேர்தலை நடத்துங்கள். இதனை எனது சவாலாகவே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

உள்ளாட்சி, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துங்கள். நாங்கள் தான் ஆட்சி அமைப்போம். மக்கள் எங்கள் பக்கம்தான். எங்களது வலுவை உங்களுக்கு அதன் மூலம் காண்பிப்போம்,” என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பையின் சிவாஜி மகாராஜ் பூங்காவில் நடைபெற்ற தசரா விழாவில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே இவ்வாறு எதிரணியினருக்கு சவால் விடுத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!