புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதி திராவிட, பழங்குடியின மக்களுக்கான நிதியுதவி ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இலவச வேட்டி, சேலைக்குப் பதிலாக வழங்கப்பட்டு வந்த ரூ.500 நிதியுதவி 1,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ரூ.1,000 நிதியுதவி தீபாவளி முதல் மக்களுக்கு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.