மருத்துவமனை உணவகத்தில் எலிகள்; உணவகத்தை மூட உத்தரவு

பெரம்பூர்: சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ள உணவகத்தை தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது.

இங்கு கடந்த சில நாள் களுக்கு முன்னர் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டா போன்ற உணவு வகைகளில் எலிகள் நடமாடிக்கொண்டிருந்தன. இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இதுபற்றி அந்த உணவக ஊழியர் ஒருவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதில் கிடைக்காததால், மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

புகாரை ஆய்வு செய்த மருத்துவக் கல்லூரி முதல்வர் உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து உணவகம் மூடப்பட்டது.

இந்த சம்பவத்தை கருத்தில்கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள உணவகங்களை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை உத்தர விட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!