திருப்பதி: ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாணவர் விடுதி ஒன்றில், படுக்கைக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த மலைப்பாம்பைப் பிடித்தனர். பின்னர் அவர்கள் அதை மீண்டும் காட்டுக்குள் விட்டதாகக் கூறப்பட்டது.