மீட்கப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி

புதுடெல்லி: தீபாவளி நாளன்று சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 17 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில், இன்றுதான் (நவம்பர் 28) தங்களுக்கு உண்மையான தீபாவளி என்று அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த அயராத மீட்புப் பணியின் வெற்றியை நாடே மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. ஊழியர்கள் வெளியே வந்தபோது, சுரங்கத்தின் வெளியே காத்திருந்த அவர்களுடைய உறவினர்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குவியும் பாராட்டு

மீட்புப் பணியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்புக் குழுவினர் ஈடுப்பட்டிருந்தனர். அதில் ஒருவர்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அனைத்துலக சுரங்க நிபுணர் ஆர்னல்ட் டிக்ஸ்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல், புவியியல், இடர் மேலாண்மை ஆகிய துறைகளில் டிக்ஸ் கவனம் செலுத்தி வருகிறார்.

ஊழியர்களை மீட்பதற்கு உதவ, அவர் நவம்பர் 20ஆம் தேதி அழைக்கப்பட்டார். அவர் சொன்னது போலவே, செவ்வாய்க்கிழமை 41 தொழிலாளர்களும் எந்தவித ஆபத்துமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்புப் பணியின்போது சுரங்கத்துக்கு வெளியே இருந்த சிறிய கோவிலில் டிக்ஸ் மிகவும் அமைதியான முறையில் அமர்ந்து பிரார்த்தனை செய்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியது. அவருக்குப் பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!