புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகருக்கு அருகே உள்ள கோவில்பட்டியில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் கூடத்தில் செவ்வாய்க்கிழமை காலை வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வெடி தயாரிப்புக் கூடம் முழுமையாக வெடித்துச் சிதறிய நிலையில், அதிர்ஷ்டவசமாக சம்பவம் நடந்தபோது அங்கு யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் தப்பினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.