ரூ.20 லட்சம் கொள்ளையடித்துவிட்டு ஏடிஎம் சாவடியைக் கொளுத்திய திருடர்கள்

குருகிராம்: அடையாளம் தெரியாத இரண்டு திருடர்கள் குருகிராமின் கெர்கி துல பகுதியில் இருந்த வங்கி ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி அதிலிருந்து ரூ. 20 லட்சத்தைத் திருடியதுடன் தீ வைத்தும் கொளுத்திவிட்டனர்.

சம்பவம் டிசம்பர் 8ஆம் தேதியன்று காலை சுமார் 5.45 மணிவாக்கில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

எந்த ஒரு தடயவியல் ஆதாரமும் மிஞ்சக்கூடாது என்பதற்காகத் திருடர்கள் இவ்வாறு தீ வைத்தனர் எனத் தாங்கள் நம்புவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தைக் காட்டும் கண்காணிப்பு கேமரா பதிவின்படி காரில் வந்த இருவரும் இயந்திரத்தை வெட்டித் துண்டாக்கி, பணத்தை எடுத்துக்கொண்டு, தீ மூட்டிவிட்டு கார் பின்பகுதியில் பணத்தை வைப்பதாகத் தெரிகிறது.

பின், கார் புதுடெல்லியை நோக்கிச் செல்வதாகக் காட்டப்படுகிறது.

இயந்திரத்தில் இருந்த மொத்த பணத்தையும் திருடர்கள் எடுத்துவிட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் தங்களுக்குத் தடயம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் சந்தேக நபர்கள் எவரும் கண்டறியப்படவில்லை என்றும் குருகிராம் காவல்துறை பேச்சாளர் சுபாஷ் போகன் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!