பிரதமர் மோடி: உலக மக்களுக்கு ஊக்கம் தரும் திருக்குறள்

புதுடெல்லி: பிரான்சில் உள்ள திருவள்ளுவர் சிலையின் புகைப்படத்தைத் தனது எக்ஸ் ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஞானம், அறிவின் அடையாளமாக உலக மக்களின் மனங்களில் திருவள்ளுவர் உயர்ந்து நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் செர்ஜி நகரில், பார்க் பிரான்ஸ்வா மித்தேரான் என்ற இடத்தில் வெண்கலத்தில் திருவள்ளுவரின் முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. பிரான்ஸ் வொரெயால் தமிழ்க் கலாசார மன்றம் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், பிரான்சில் உள்ள திருவள்ளுவர் சிலையின் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “பிரான்சின் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை நமது கலாசாரப் பிணைப்புகளுக்கான அழகான ஒரு சான்றாகும்.

“திருவள்ளுவர் ஞானம், அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார். அவரது எழுத்துகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களை ஊக்குவிக்கின்றன,” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் பிரான்சுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பாரிஸ் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றியபோது, “உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப் பழமையான மொழி இந்திய மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!