தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரளாவில் அதிகரிக்கும் கொவிட்-19 சம்பவங்கள்

1 mins read
81d04755-cd2d-40b9-a0de-16f2443c090f
கேரளாவில் காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. - படம்: ஐஏஎன்எஸ்

திருவனந்தபுரம்: இந்தியா முழுவதும் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக கேரள மாநிலத்தில் கொவிட்-19 கிருமி வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் மட்டும் அம்மாநிலத்தில் 479 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாள்களில் மட்டும் 825 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 90% பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொவிட்-19 கிருமித்தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

“சுவாச பிரச்சினைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் கொவிட்-19 பாதிப்பு கண்டறியப்படுகிறது. காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொவிட்-19 பரவல் குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம். தொற்றுநோய்களைத் தவிர்க்க பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்,” என்று கேரள மாநில மருத்துவர் சன்னி கூறினார்.

குறிப்புச் சொற்கள்