நீதிபதிக்கே பாலியல் துன்புறுத்தல்: நீதி கிடைக்காததால் உயிரைத் துறக்க விருப்பம்

லக்னோ: பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் உயிரைப் போக்கிக்கொள்ள அனுமதிக்குமாறும் இளம் பெண் நீதிபதி ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி உள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி என்னும் இடத்தில் நீதிபதியாக இருந்தபோது சக மாவட்ட நீதிபதி ஒருவரால் தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அதன் காரணமாக தாம் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அந்தத் துன்புறுத்தல் தொடர்பான விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றும் அந்தப் பெண் நீதிபதி வேதனை தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நிர்வாக நீதிபதியிடம் புகார் அளித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நான் நடைபிணமாக மாற்றப்பட்டேன்.

“உயிரற்ற எனது உடலைச் சுமந்து செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் முடிக்க தயவுசெய்து என்னை அனுமதிக்கவும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், விசாரணை நிலவரம் பற்றி அலகாபாத் உயர் நீதிமன்ற நிர்வாகத்திடம் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிக்கை கேட்டுள்ளார்.

பெண் நீதிபதியின் கடிதம் வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!