பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீர், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஆயுதப் படைப் பிரிவின் முகாமில் மர்மமான குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் திடீர் வெடிப்பினால், சன்னல் கண்ணாடிகள் மற்றும் வளாகத்தின் உள்புறம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் முகப்பு கண்ணாடிகள் ஆகியவை சேதமடைந்துள்ளன. யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்தது.

