புதுடெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் 177 புலிகள் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் 45 புலிகளும், மத்தியப் பிரதேசத்தில் 40 புலிகளும், உத்தராகண்டில் 20 புலிகளும், தமிழ்நாட்டில் 15 புலிகளும், கேரளாவில் 14 புலிகளும் இறந்துள்ளன. இவற்றில் 54 விழுக்காட்டுப் புலிகள் காப்பகத்திற்கு வெளியே மாண்டன.
இந்தியாவில் 3,167 புலிகள் வாழ்வதாகக் கூறப்படுகிறது.