புதுடெல்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு 7வது முறையாக அமலாக்கத் துறை சனிக்கிழமை புதிய அழைப்பாணை அனுப்பியுள்ளது.
சட்ட விரோத நிலக்கரிச் சுரங்க வழக்கில் ஹேமந்த் சோரனிடம் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கிட்டத்தட்ட 9 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
அதன்பிறகு பல்வேறு வழக்கு விசாரணைகளின்கீழ் அவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. அப்போது அவா் வரவில்லை.
ஏற்கனவே ஆறுமுறை வராத ஹேமந்த் சோரனுக்கு கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு இது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.