காபி இயந்திரத்தில் கடத்தமுயன்ற 3.5 கிலோ தங்க வளையங்கள் பறிமுதல்

லக்னோ: லக்னோவின் சௌத்ரி சரண் சிங் அனைத்துலக விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தரையிறங்கிய இரு பயணிகளிடமிருந்து ரூ.2.55 கோடி மதிப்புள்ள ஏறக்குறைய 4 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டதாக ஏஎன்ஐ ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.

முதல் சம்பவத்தில், உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் பயணி ஒருவர் கொண்டு வந்திருந்த காபி இயந்திரத்தை ஸ்கேன் செய்தபோது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, காபி இயந்திரத்தை சுத்தியலால் உடைத்து, கருவிகள் மூலம் அதனை வெட்டியதில், அதனுள் இருந்த 3.497 கிலோ எடை கொண்ட இரண்டு தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதொடர்பான காணொளியும் பரவி வருகிறது.

இதேபோன்ற சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்ததாகவும் அப்போது, சுங்க அதிகாரிகள் காபி இயந்திரத்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், மற்றொரு சம்பவத்தில் ஷார்ஜாவில் இருந்து லக்னோவுக்கு வந்த பயணியின் குடலில் இருந்து 554 கிராம் தங்கம் மீட்கப்பட்டது.

இரு பயணிகளிடமும் கடத்தல் தங்கம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!