ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

அகமதாபாத்: குஜராத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்திலுள்ள ரான் கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அச்சிறுமி திங்கள்கிழமை பிற்பகல் கிட்டத்தட்ட 1 மணியளவில் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார்.

கிட்டத்தட்ட 9 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சிறுமி மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்டபோது சிறுமி சுயநினைவின்றி இருந்ததாகவும் முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கி ஜாம் கம்பாலியா நகரில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

சிறுமியின் உடலைக் கூறாய்வு செய்த மருத்துவர்கள், உயிர்வாயு இல்லாத காரணத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவள் உயிரிழந்ததாகக் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!