சபரிமலைக்கு 50 முறை யாத்திரை; 10 வயது சிறுமி சாதனை

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது சிறுமி ஒருத்தி இதுவரை 50 முறை யாத்திரை சென்று சாதனை படைத்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர விளக்குப் பூசைகள் மிகவும் புகழ்பெற்றவை. இந்நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இவ்வாண்டு வழக்கத்தைவிட அதிகமான குழந்தைகளைப் பக்தர்கள் அழைத்துச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கேரளாவின் கொல்லம் மாவட்டம், எழுகோன் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் மணி என்பவரும் தன் மகள் அதிதியை இருமுடி கட்டி சபரிமலைக்கு 50வது முறையாக அழைத்துச் சென்றிருந்தார். எழுகோனில் உள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பில் படித்து வருகிறார் அதிதி.

அதிதி பிறந்து ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தது முதல் இப்போதைய 10 வயது வரை ஒவ்வோர் ஆண்டும் மாதாந்திர பூசை, மண்டல பூசை, மகரவிளக்கு பூசைக் காலங்களில் தவறாமல் சபரிமலைக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!