ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை அதிகாலை 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்தது.
நள்ளிரவு 12.38 மணி அளவில் பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. கடந்த சில நாட்களாக மியன்மார், இந்தோனீசியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான் என பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஜப்பான் நாட்டில் கிட்டத்தட்ட 62 பேர் உயிரிழந்தனர்.